Wednesday, July 22, 2009

நேற்று பேருந்தில்.....

பேருந்தினுள்

பூக்கள்
நாற்பது சதவீததிற்கும்
சற்று அதிகமாக
ஒன்பது இருக்கையில்

தேனீக்கள்
அறுபது சதவீததிற்கும்
சற்று குறைவாக
பதினோறு இருக்கையில்

இரவு பெய்த மழையினால்
குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது

சில பூக்கள்
புன்னகை உதிர்த்தபடி
கைபேசியில் பேச்சு

சில பூக்கள்
ரோட்டை வேடிக்கை பார்த்தபடி
கன்னத்தில் கைவைத்து

ஒட்டுனரின்
தலைக்கு மேல்
காளி ஒற்றை காலை தொங்க போட்ட படி
சிங்கத்தின் மேல் அமர்ந்தது போல்
ஒரு படம் தொங்கியது

காளி தலைமுடியை
உலர்த்திக்கொண்டிருந்தாள்

காளிக்கு இன்று காலை
சைவ சாப்பாடு
வெண்பொங்கலும்
உளுந்தவடையும்
நன்றாக சாப்பிட்டிருந்தாள்

குளிர்ந்த காற்று
குலுக்கலுடன் பேருந்து பயணம்
காளிக்கு இதமாகயிருந்தது

கண்களை திறந்துமூடி
திறந்துமூடி தூங்கினாள்

சிங்கம்
பூக்களை வேடிக்கை பார்த்தது

அதில்
ஒரு பூ

வெடித்த பருத்தியை
கறுத்த மேகத்தில்
தேய்த்தது போன்ற வண்ணத்தில்
ஆடை

பசும்பாலில்
சிறிதளவு சந்தனம்
சேர்த்து கிடைக்கும் வண்ணத்தில்
பூவின் நிறம்

"டிக்கெட் வாங்காதவன் வாங்கிக்கோ,
நீ வாங்கிட்டியா?" பெண் நடத்துனர்
படியில் நிற்கும் ஒருவனை கேட்கிறாள்

சிங்கம் கர்ஜித்தது
யோசனை தடைபட்டதால்

காளி சிங்கத்தின்
பிடரி மயிரை பிடித்து
தடவி விடுகிறாள்

சிங்கம் சிரித்தபடி
மீண்டும் வேடிக்கை பார்க்கிறது

ஒட்டுனர்
தலையை தூக்கி
காளி படத்தை பார்க்கிறார்
எப்போதும் பார்க்கும்
காளி, சிங்கத்தின் முகம்
தெரிகிறது
கன்னத்தில் போட்டுக்கொள்கிறார்.

No comments:

பார்வைகள்