Thursday, October 15, 2009

கடவுளை பார்க்கச் சென்றோம்


முழுமையாக 24மணி நேரம்
முடிந்திருந்தது கடவுளை பார்த்து

இன்னும் ஒரு நிமிடம் கூட தாமதிக்க மாட்டாள் அம்மா

24மணி நேரத்திற்குள் 15முறை
கடவுளின் நினைவு வந்ததென்றாள் அம்மா

பார்த்தவுடன் பாசம் கொள்ள வைக்கும்
பெண்கடவுள் அவள்

துன்பம் மறந்து புன்னகை புரிய வைக்கும்
பெண்கடவுள் அவள்

விளையாட்டிலே இரவு பகலை கடக்கும்
பெண்கடவுள் அவள்

சைகையால் மொழிபேசும்
பெண்கடவுள் அவள்

அண்ணியின் அம்மா அண்ணிக்கு அம்மை வந்துள்ளதாக
அம்மாவிடம் தொலைபேசியில் கூறினாள்

அண்ணியின் வீடு
அடுத்த தெருவில் உள்ளது

மாலை முடிந்து இரவு உதயமாகும் பொழுதில்
நானும் அம்மாவும் அண்ணியை பார்க்க சென்றோம்

பெண்கடவுளை பார்த்த சந்தோசத்தில்
அம்மாவின் முகம் மலர்ந்தது
அண்ணியின் அம்மாவிடமிருந்து பெண்கடவுளை வாங்கிய அம்மா
‘கன்னுக்குட்டி டாடா போகலாமா…’
என்றாள் அண்ணனின் மகளிடம்

No comments:

பார்வைகள்