Monday, November 9, 2009

காமம் வழிந்தோடும் உடல்

*
சிறுகதையின் இப்பகுதியை எழுதுவது கதையின் கதாநாயகியான சாவித்ரி.

ஆந்திரமாநிலம், கர்னூல் ரயில் நிலையம்.

இரயில் நிலையத்தில் ஆட்கள் நடமாட்டம் அவ்வளவாகயில்லை. இரண்டு, மூன்று பேர் சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். டீ விற்பவன் நடைமேடையில் "சாயா, சாயா" என்று கூவிக்கொண்டிருந்தான். ஹைதராபாத்திலிருந்து சென்னை எக்மோர் செல்லும் காச்சிகுடா எக்ஸ்பிரஸ் நடைமேடை ஐந்திற்கு வந்தது. சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தவர்கள், நடைமேடையில் தூங்கி கொண்டிருந்தவர்கள் காச்சிகுடா எக்ஸ்பிரஸ்ஸில் எறிக்கொண்டனர்.நடைமேடை ஐந்தில் எங்கள் இருவரை தவிர வேறுயாருமில்லை.

"என்ன முடிவு செஞ்சிருக்க?" என்று கேட்டான் வசந்த்.

"இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கொள். எப்படியும் அப்பாவிடமிருந்து சம்மதம் வாங்கிடுவேன்" என்றேன்.

"எனக்கு நம்பிக்கையில்லை. இந்த டிசம்பர் வந்தால் மூன்று வருடம் முடிந்துவிடும் உன் அப்பாவின் சம்மதத்திற்கு நாம் காத்திருப்பது. ஒன்றை இலக்காமல் ஒன்றை பெறமுடியாது. எழுத்தாளர் சுஜாதா அவருடைய பல நாவல்களில் இதை கூறியுள்ளார். வீட்டில் சொல்லாமல் நாளை இதே நேரம் இங்கேவா ஹைய்தராபாத் செல்வோம். கைநிறைய சம்பாதிக்கிறேன் உன்னை மகாராணி போல் வைத்துக்கொள்வேன்" என்றான்.

என் கண்களில் நிறைந்திருந்த கண்ணீரின் ஒரு துளி கீழே விழுந்தது.

"ஏன் அழுகிறாய்?" என்று கேட்டான்.

பதிலேதும் கூறாமல் தலையை இடது வலது புறமாக ஆட்டினேன்.

**
சிறுகதையின் இப்பகுதியை எழுதுவது கதையின் கதாநாயகன் வசந்த்.

கண் விழித்துப்பார்த்தேன். சாவித்ரி போர்வைக்குள் தூங்கிக்கொண்டிருந்தாள். போர்வையை மெதுவாய் விலக்கினேன். அவள் நிர்வாணமாக கிடந்தாள். ஜன்னல் கம்பியின் நிழல்கள் அவள் உடல் மீது கறுப்பு கோடுகள் இட்டிருந்தன, என் விரல் அவளின் நெற்றியிலிருந்து தொடங்கியது ஒரு நேர்கோட்டினை, புருவம், பிளவுட்டிருந்த உதடுகள், மார்புக்குழி, தொப்புள் இறுதியாக பிறப்புறுப்பில் முடிந்தது நான் வரைந்த நேர்கோடு. ஆழ்ந்த தூக்கத்திலிருந்தவள் கண்முழித்தாள் நேர்கோடு முடியும் தருணத்தில்.

சாவித்ரி இப்போது சந்தோஸமாக இருக்கிறாள். இங்கு வந்த பின் சாவித்ரி ஒரு நாளும் அழுததில்லை.

நான் அலுவலகம் சென்ற பின் என் லைப்ரரிக்கு சென்று புத்தகம் படிக்கிறாள். ஆங்கில நாளிதழ் படித்து நாட்டு நடப்பு பற்றி என்னுடன் விவாதிக்கிறாள். சாவித்ரிக்காக இத்தனை வருடம் காத்திருந்தது வீணாய் போன நேரங்கள் அல்ல என்று உணர்கிறேன்.

ஹைய்தராபாத் பிலிம் கிளப்பில் திரையிட்டிருந்த "தி ரீடர்" திரைப்படம் பார்க்க அழைத்துச்சென்றேன், திரைப்படமானது 35 வயதான பெண்ணிக்கும் 17 வயதான இளைங்கனுக்குமான உறவை பற்றிய படம்.

"சாவித்ரி, படம் பிடிச்சிருக்கா?"

"இன்றிறவு படத்தின் சில காட்சிகளை நாம் செய்து பார்க்க போகிறோம்" என்றாள்.

படுக்கை அறை, படிக்கும் அளவு வெளிச்சம், என் மடியில் சாவித்ரி படுத்திருக்கிறாள். நான் அழகான காதல் கதையை படிக்கிறேன். காதில் கேட்ட காமம் சொட்டும் வரிகளால் காமம் வழிந்தோடியது அவள் உடலில்.

உடலுறவிலிருந்த போது அவள் கண்களில் நிறைந்திருந்த கண்ணீரின் ஒரு துளி கீழே விழுந்தது.

""ஏன் அழுகிறாய்?" என்று கேட்டேன்.

பதிலேதும் கூறாமல் தலையை இடது வலது புறமாக ஆட்டினாள். தூக்கம் வருவது போலிருந்தது. சிறிது நேரத்தில் கண்மூடி தூங்கினேன்.

***

சிறுகதையின் இப்பகுதியை எழுதுவது கதையின் ஆசிரியர்.

ஆந்திரமாநிலம், விசாகப்பட்டினம் கடற்கரையை ஒட்டிய வீடு.

காலிங்பெல் அடிக்கும் சப்தம் கேட்டு கதவை திறந்தால் சாவித்ரி.

"சாப்பிட்டீங்களா?" என்று கேட்டாள் சாவித்ரி.

பதில் கூறாது படுக்கையறை சென்று உடைமாற்றிக்கொண்டு டிவியின் முன் அமர்ந்தான்.

"ஆபிஸ்ல எதுவும் பிரச்சனையா?" என்று கேட்டாள் சாவித்ரி.

டிவியை பார்த்துக்கொண்டிருந்தவனிடமிருந்து பதில் ஏதுமில்லை.

டிவியை பார்த்துக்கொண்டிருந்தவன் பாதியில் எழுந்து படுக்கச்சென்றான்.

நடுராத்திரி, திறந்த ஜன்னல் வழியே பார்த்தால் நிலவின் முழுமுகம் தெரியும்.

ஆழ்ந்த தூக்கத்திலிருந்த சாவித்ரியை எழுப்பி அவளின் விருப்பமில்லாமலே உடலுறவு கொண்டான். உடலுறவுக்கு பின் அவளின் கண்களில் நிறைந்திருந்த கண்ணீரின் ஒரு துளி கீழே விழிந்தது.

பாம்பே நோக்கி சாவித்ரி பேருந்து பயணத்திலிருந்தாள். ஆங்கில நாளிதழின் பக்கங்களை திருப்பிக்கொண்டிருந்தாள். அவளை பற்றிய கட்டுரை நாளிதழில் வந்திருந்தது. அவளுக்கு நேற்றைய இரவைப்பற்றிய நினைவு வந்தது.

"ஏன் அழுகிறாய்" என்று கேட்டான் அரவிந்த்.

சாவித்ரி சற்று நேரம் மெளனமாகயிருந்தாள்.

"நான் ஒருவரை விட்டு பிரிந்து செல்லும் போது அவர்களை கொன்று விடுவது வழக்கம். நீங்கள் எல்லாம் பாக்கியசாலிகள் மரணத்திற்கு முன்பே மரணத்தின் கண்ணீரை பார்க்க கொடுத்து வைத்தவர்கள். இதுவும் கொலைபுரிதலின் புதிய முயற்சி" என்றாள்.

அரவிந்த் "ஆ" என்று அலறினான். அவனின் மூச்சு மெல்ல மெல்ல உடலை விட்டு பிரிந்து கொண்டிருந்தது.

-முற்றும்-

சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

2 comments:

CS. Mohan Kumar said...

Shocking ஆன கதை + முடிவு

இந்த எளியவனும் கதை போட்டியில் கலந்துள்ளேன். "அடுத்த வீட்டு பெண்" கதை படிக்க எனது blog-க்கு வருகை தரவும்: http://veeduthirumbal.blogspot.com/

கோவி.கண்ணன் said...

போட்டியில் வெல்ல வாழ்த்துகள் !

பார்வைகள்