Wednesday, July 22, 2009

புதிய அத்தியாயம்


அவளோ
சேலை அணிந்திருப்பாள்
நாணத்துடன் அமர்ந்திருப்பாள்

நீயோ
அசடு வழிந்து அமர்ந்திருப்பாய்

உன்னை பார்த்து சிரிப்போருக்கு
பதிலுக்கு நீயும் சிரிப்பாய்
என்ன அர்த்தமென்று தெரியாமலே

ஜிலேபி, சாக்லேட், பழங்களுக்கு கூட
கேட்டிருக்கும் நீ அமெரிக்கா போயிருந்த விசயம்
அந்தளவு உன் உறவினர்களின் பிரச்சாரம்

நிலவு உதயமாகும் திசையறியாது வானம்

அவளோ
சூரியன் போல்
தலை நிமிரும் ஒவ்வொரு முறையும்
உன்னை பார்பாள்

சபையில்
உனக்கு அவள் மட்டும் தெரியும்
அவளுக்கு உன்னை மட்டும் தெரியும்
மற்றவர்கள் மறைந்து போவார்கள்

அவளின் தலையில் பூ
சூட்டுவாய் நீ
இனி
உனக்கு உடையவள்
அவள்

சாக்லேட் ஊட்ட சொல்வார்கள்
உன்னை
நீயோ
யாசகம் கேட்பாய் அவளிடம்
ஊட்டுவதற்கு
பின்னாலே இழுத்துச்சொல்வார்கள்
அவளை அவளது தோழிகள்

இது தான்
உங்கள் விளையாட்டின் ஆரம்பம்

இரவுப்பொழுது நொடிகளாகும்
பகல் பொழுது முடிவிலியாகும்

ப்ளீஸ்
இனிமேலாவது
செல்போனை
ரீ-சார்ஜ் செய்யவும்

உன் பெயர் சொல்லியாவது
செல்போன் நிறுவனங்கள்
வாழட்டும்

வாழ்கையின் புதிய
அத்தியாயத்தை எழுதப்போகும்
உனக்கு
என்
மனமார்ந்த நல்வாழ்த்துகள்

2 comments:

Vijayaraj said...

hmm..Enakku eluthuna kavithaiya?

கிரகம் said...

ஆமாடா உனக்காக எழுதியது

பார்வைகள்