Monday, October 19, 2009

கிணற்றில் மிதக்கும் பிளாஸ்டிக் பாட்டில்

காத்திருந்தேன்
தீபாவளியை எதிர்பார்த்து
காத்திருந்தேன்
ஒரு மாதத்திற்கு முன்பே புக் செய்த
இரயில் வண்டி டிக்கெட்டை பார்க்கும் போது

விநாயகர் சதுர்த்தி வந்தது
விஜயதசமி வந்தது
தீபாவளி எப்போது வரும்?

நாள்களோ அலட்சியமாய் நகர்ந்தன
என் தவிப்பு புரியாமல்
நாள்பொழுது கொஞ்சம் சீக்கிரம் நகர்ந்தால் என்னவாம்

அந்த நாள் வந்தது

வண்டி எண் 2604ல் ஹைய்தராபாத்திலிருந்து கிளம்பினேன்
அடுத்த நாள் அதிகாலை சென்னை சென்ரல் வந்தடைந்தேன்

ஹிந்து, ஆனந்த விகடன் வாங்கிக்கொண்டு
சொந்த மண்ணை நோக்கி
குருவாயூர் எக்ஸ்பிரஸ்ஸில் பயணித்தேன்
பொழுதுசாயும் முன்பே வந்து சேர்ந்தேன் சாத்தூர்
தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பு

முதல் நாள்
சிவகாசி சென்று ஐய்யாமை, அத்தை, சித்தியை பார்த்தேன்
ஊர்திரும்பும் போது பட்டாசு கொடுத்தனிப்பினர்

அடுத்த நான்குநாள்கள்
இலக்கிய இதழ் படித்தும்
இணைத்தில் ராமகிருஸ்சணன் வலைப்பக்கங்களுக்கு சென்றும்
நாள்களை கழித்தேன்

தீபாவளி அன்று

தேள், நுரையீரலில் புண் படம் போட்ட
சிகரெட், செய்யது பீடி, பான்பாரக் விற்றேன்
வண்ணவண்ண நிறங்களில் கூல்டிரிங்க்ஸ் விற்றேன்
அப்பாவுக்கு உதவியாக கடையில்

மாலை உதயமானது
வானத்தில் யாரோ கருப்புவண்ணம் பூசியிருந்தனர்

புஸ்வானம் சிரித்தது
லெட்சுமி வெடிகள் கத்தியது
சங்கு சக்கரம் தலைகிறுகிறுக்க சுற்றியது
சிறுபிள்ளைகள், அழகான கன்னிகள், பக்கத்து வீட்டு அக்கா,
எதிர்வீட்டு தாத்தா, பூவிற்கும் அக்கா
அவரவர் வீட்டுவாசலில் தீபாவளியை கொண்டாடினர்

நண்பர்களை சந்தித்தேன்
சாத்தூர் மெயின் ரோட்டில்
சிவகாசியில் வேலை செய்யும்
பிரிண்டிங்க்டெக்னாலஜி இஞ்ஜினேயர் பாலா
ATM mechine செய்துதரும் நிருவனத்தில்
மெக்கானிக்கல் இஞ்ஜினேயராக வேலை செய்யும் ரமேஸ்
மஸ்கட்டிலிருந்து ஒட்டகப்பால் கொண்டு
கொண்டுவருவதாக சொன்ன நண்டு
உள்ளூரில் பேன்சிஸ்டோர், மொபைல் ரீசார்ச் கடை
வைத்திருக்கும் மாரியப்பன்
இதைத்தவிர கருவேப்பிலை, ராஜபாண்டி, ராஜா, ராஜாஜி

புதிதாக மொபைல் நண்பர் மாற்றியிருந்தவன்
என் நண்பருக்கு மிஸ்டுகால் கொடுத்தான்
நானும் பல நண்பர்களுக்கு மிஸ்டுகால் கொடுத்தேன்

உள்ளூரில்
தற்கொலை செய்துகொண்ட ஸ்கூல் சீனீயரின் கதை
ரோட்டில் பேசிக்கொண்டிருந்தவர்களை போலிஸ் கூட்டிச்சென்று விசாரித்த
கதைகளை பேசினோம் அரைமணி நேரம்

அருகிலுள்ள தேனீர்கடையை நோக்கி நடந்தோம்

வானெங்கும் வண்ணமயம்

தீபாவளிக்கு மறுநாள்

ஆறுபேர்
ஒரு TVS 50, ஒரு splender, ஒரு bajaj chetek க்கில்
குளிக்கச்சென்றோம் கிணற்றுக்கு
எனக்கு முதல்தடவை

வழியில்
பள்ளி நண்பன் ஒருவனைப்பற்றி
‘என்ன மாப்பிள்ளை!
அவனுக்கு கல்யாணமாகி ஒரு வருசம் இருக்குமா?’
வேறொருவன்
‘இல்லை மாப்பிள்ளை
11 மாசம்’
‘தலைதீபாவளியை குழந்தையோட கொண்டாடுகிறான் ,
ஆனாலும் ரொம்ப அவசரப்படுராங்கடா பசங்க’
‘அவன் கல்யாணத்திற்கு முன்னாடியே முடிச்சிட்டான் மாப்பிள்ளை’
ஆச்சர்யமாக இருந்தது எனக்கு
அவனைப்பற்றிய பேச்சு முடிவதற்குள்
கிணற்றடி வந்தது

கருவேலி காட்டிற்கு நடுவே கிணறு
கிணற்றடிக்கு அருகே
வீச்சம் எடுக்கும் கதவில்லாத கருங்கல் அறை
கிணற்றுக்குள்
கறுப்புநிற தண்ணீர், சுவரெங்கும் பாசம்
கிணற்றில் மிதக்கும் பிளாஸ்டிக்பாட்டில்
வேறேதுவும் தென்படவில்லை கண்களுக்கு
சுருக்கமாக சாத்தூர் நகராட்சி தண்ணீர் போலிருந்தது

சற்றுநேரம் கழித்து
கிணற்று தண்ணீரில்
அவனின் முகம்
தெளிவாக தெரிந்தது

3 comments:

முகமது பாருக் said...

சிறப்பு.. வாழ்த்துகள்

உயிரோடை said...

சிறுகதை போல வந்திருக்கிறது கவிதைக்கான சாயலில். நன்று வாழ்த்துகள்

கிரகம் said...

உயிரோடை,

நன்றி

பார்வைகள்