Wednesday, March 3, 2010

மரணத்தில் ஒழுக்கத்திற்கான போராட்டம்

மரணத்தில் ஒழுக்கத்திற்கான போராட்டம்   - Sudha Umashankar

                                                                                                                தமிழில் - கிரகம்

இது தி ஹிந்து நாளிதழில் வெளியாகியிருந்த கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பு.

Euthanasia என்றால் என்ன? Euthanasia ஒரு கிரேக்க மொழி சொல். இதற்கு "நல்ல சாவு" அல்லது "கருணை கொலை" என்று பொருள். "Euthanasia என்பது நோயுற்ற ஒருவரை கொலை செய்தல். டாக்டரின் முன்னிலையில் இந்த கொலையானது நடைபெறுகிறது. இந்தக் கொலையின் மூலம் நோயாளியோ அல்லது நோயாளியின் குடும்பத்தினரோ ஒரு விதத்தில் நன்மை அடைகின்றனர்" என்று Euthanasia பற்றி Indian society of critical care medicine committe கூறுகிறது.

"Euthanasia சட்ட ரீதியாக தடைசெய்யப்பட்ட செயல்". Euthanasiaவை அதனை ஒத்த செயல்பாடுகளை கொண்ட 'Passive Euthanasia' வுடன் ஒப்பிட்டு பார்ப்போம். Passive Euthanasia என்பது தீவிர சிகிச்சை பெற்று வரும் நோயாளியை லைப்-சப்போர்ட் சிஸ்டமிலிருந்து நீக்கி விடுவது, உதாரணத்திற்கு சுவாசக்கருவிகளை நோயாளியிடமிருந்து நீக்கி விடுவது, நோயாளிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்காமல் இருப்பது, உணவு மற்றும் நீர் தராமல் இருப்பது, இதன் மூலம் நோயாளி சில நாட்களிலோ அல்லது வாரங்களிலோ மரணம் அடைகிறான். "Euthanasia ஒரு முழுமையான கொலை புரியும் செயல். நோயாளிக்கு உணவு தராமல் இருப்பதாலும், தொடர்ந்து சிகிச்சை அளிக்காமல் இருப்பதாலும் நோயாளிக்கு ஏற்படும் மரணமும் Euthanasiaவும் ஒன்றாகாது" என்று டாக்டர் மிரினல் சிர்கர் கூறுகிறார்.

தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வரும் நோயாளியிடமிருந்து லைப்-சப்போர்ட் சாதனங்களை நீக்கி வைப்பது தொடர்பாக நம் நாட்டிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் முக்கிய வேறுபாடுகள் உள்ளன. "மேற்கத்திய நாடுகளில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி மீண்டும் பிழைக்க வாய்ப்பில்லையென்று தெரிந்தால் லைப்-சப்போர்ட் சாதனங்களிலிருந்து நோயாளியை நீக்கிவிடுகின்றனர். இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் தீவிர சிகிச்சை பிரிவில் இறப்பவர்கள் எண்பது முதல் தொண்ணூறு சதவிகிதம் பேர் லைப்-சப்போர்ட் சாதனங்களை நீக்கிய பிறகு தான். இதனை தெளிவான மருத்தவ பரிசோதனைக்கு பின்னரே செய்கின்றனர். மேலும் அவர்களின் சட்டத்தில் இதற்கு இடமிருக்கிறது. ஆனால் இந்தியாவில் இதற்கான சட்டங்கள் இதுவரை கிடையாது" என்கிறார் டாக்டர் மிரினல் சிர்கர்.

இது போன்ற சட்ட திட்டங்கள் இந்தியாவில் இல்லாத காரணத்தால் மரணத்தின் வாசலில் விழுந்துவிட்டவர்களையும் நம் டாக்டர்கள் பிழைக்க வைக்க முயற்சிப்பதும் இறுதியில் டாக்டர் தோற்று மரணம் ஜெயித்து விடுகிறது. இவ்வாறு டாக்டர்கள் பிழைக்க வைக்க முயற்சி செய்யவில்லையென்றால் டாக்டர்கள் மீது சட்டங்கள் பாய வாய்ப்புள்ளது. இதனாலே பிழைக்க வாய்ப்பில்லையென்று தெரிந்த பின்பும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளியை காப்பாற்ற முயற்சி செய்கின்றனர்.

Euthanasiaவை எப்போது பயன்படுத்தலாம்?

"Euthanasiaவை கீழ்க்காணும் இரண்டு தருணங்களில் பயன்படுத்தலாம்.

ஒன்று: தாங்கமுடியாத வலியில் அவஸ்தைப்படும் கேன்சர் நோயாளிக்கு அளிக்கலாம்.தற்போது இருக்கும் மருத்துவ சூழலில் தொண்ணூறு சதவீத வலியை போக்க மருந்துகள் உள்ளன. ஆனால் இந்த வசதி கொண்ட மருத்துவமனைகளோ மிகவும் குறைவு. சில சமயங்களில் Euthanasiaவை நோயாளியோ அல்லது நோயாளியின் குடும்பத்தினரோ நோயாளிக்கு தரச்சொல்லி கேட்கின்றனர். அவ்வாறான சமயங்களில் டாக்டர் நோயாளிக்கு எப்போதும் தரும் வலி நிவாரண மருந்தின் டோசேஜை அதிகப்படுத்தி தருகின்றனர். இவ்வாறு டோசேஜை அதிகப்படுத்தி தருவதன் மூலம் நோயாளி மரணம் அடைகிறான். இவ்வாறு டோசேஜை அதிகப்படுத்தி தருவதை இந்திய சட்டம் அனுமதிக்காது.

இரண்டு: நீண்டநாள் கோமாவிலிருந்து மீள முடியாத நோயாளியை வாழ்நாள் முழுக்க தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கும் நிலையில் இல்லாத, நோயாளியை தினம்தினம் கவனிக்க இயலாத உறவினர்களின் வேண்டுகோளால் லைப்-சப்போர்ட் சாதனங்களிலிருந்து நோயாளியை நீக்கி நோயாளியை மரணம் அடையச் செய்கின்றனர்" என்கிறார் டாக்டர் சுனில் சாரூப்.

"நாம் எப்படி ஒருவரை கொலை செய்ய முடியும்? மற்றவரின் வாழ்க்கையையோ அல்லது என் வாழ்க்கையோ தீர்மானிப்பதில் எனக்கு எந்த உரிமையும் கிடையாது. இந்த வாழ்க்கை கடவுள் கொடுத்த பரிசு. நோயுற்றவர்களின் கடைசிமூச்சு இம்மண்ணில் இருக்கும் வரை அவர்களை மனஅமைதியுடன் இருக்க நாம் உதவ வேண்டும். இந்த உலகத்திற்கு வந்த ஒருவன் நிச்சயம் ஒரு நாள் இறப்பான். ஆனால் அந்த ஒருவன் கொலைபுரிதல் மூலம் மரணம் அடையக்கூடாது. மனித மனோதத்துவத்தின் படி தாங்கமுடியாத வலியினால் அல்லது மன அழுத்தத்தால் அவன் இன்று மரணத்தை விரும்பலாம். ஆனால் மறுநாள் அவன் மனதினை மாற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது. நோயாளியின் மனநிலையை நம்மால் புரிந்து கொள்ள இயலாது. மேலும் சாவதற்கு யாரும் விருப்பம் கொள்வதுமில்லை" என்கிறார் உடல்நிலை சரியில்லாதோர் காப்பகம் நடத்தி வரும் சிஸ்டர் லலிதா தெரசா.

"மரணத்தின் வாசலுக்கு நோயாளி சென்றுவிட்டான் என்று தெரியவந்தால் இனிமேல் என்ன முயற்சி செய்தாலும் நோயாளி பிழைக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தால் நாங்கள் வெளிப்படையாக நோயாளியின் குடும்பத்தினரிடம் நோயாளிக்கு என்ன விருப்பமோ அதனை செய்து கொடுங்கள் என்று கூறி விடுகிறோம். நாங்களும் நோயாளி சாதாரணமாக இருக்கவும் வலியில்லாமல் இருக்கவும் தேவையானவற்றை செய்து தருகிறோம்" என்கிறார் டாக்டர் அகர்வால்.

"இந்தியாவில் Euthanasia அல்லது கருணை கொலை சட்ட விரோதமான செயல். கருணை கொலை புரிய உதவி செய்யும் நபரோ அல்லது கொலை செய்யும் நபரோ கீழ்க்கண்ட சட்டங்களால் தண்டிக்கப்படுவார்கள்.

1. IPC section 306 அல்லது

2. Section 304ன் கீழ் கொலைபுரிதல்

இதனால்தான் அருணா ஷேன்பாக் வழக்கில் பத்திரிக்கையாளர் ஒருவர் அருணாவிற்கு உணவு தராமலிருக்க அனுமதி கேட்டு உச்சநீதி மன்றத்தில் மனு சமர்ப்பித்திருந்தாள். கோர்ட்டின் அனுமதி பெறாமல் அருணாவிற்கு உணவு தராமல் இருந்திருந்தால் பத்திரிக்கையாளர் எதாவது கிரிமினல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருப்பாள். அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பலனின்றி இருக்கும் நோயாளியை லைப்-சப்போர்ட் சாதனங்களிலிருந்து நீக்கி வைக்க சட்டம் உள்ளது. இதற்கு டாக்டரோ அல்லது நோயாளியின் குடும்பத்தினரோ குற்றம் சாட்டப்பட மாட்டார்கள். ஆனால் இந்தியாவில் இது போன்றதொரு சட்டத்தை கொண்டு வருவது கடினம். மேலும் நம் செயல்கள் அனைத்தும் ஒழுக்கத்தை முன்னிறுத்தியே அமைகின்றன" என்கிறார் கர்நாடக உயர்நீதி மன்றத்தில் அட்வகேட்டிற்கான பிராக்டிஸ் செய்துவரும் ஜெய்னா கோதாரி.

"Euthanasiaவிற்கு சாதகமாக சட்டங்கள் அமைவது என்னைப்பொருத்த வரையில் நம் சமூகத்தில் பயங்கரமான சூழலை ஏற்படுத்தும். இது போன்றதொரு சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு நாம் நன்கு யோசித்து முடிவெடுக்க வேண்டும். Euthanasiaவை அனுமதிக்கும் வழிகளை நன்கு வரையறை செய்ய வேண்டும். உதாரணத்திற்கு Transplantation of human organ actல் உள்ள Brain dead certification போல Euthanasiaவையும் முழுமையாக வரையறை செய்யப்பட வேண்டும்" என் கிறார் டாக்டர் சுனில் சாரூப்.

இந்தியாவில் Euthanasia சம்பந்தமான முக்கிய வழக்குகள்

1. முன்னால் நேஷனல் செஸ் சேம்பியன் k.வெங்கடேஷ் தன் இருபத்தி ஜந்தாவது வயதில் Duchenne's Muscular Dystrophy நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தான். k.வெங்கடேஷ் தன் உடலுறுப்புகளை தானம் செய்ய விரும்பி தனக்கு Euthanasia அளிக்க கூறினான். அப்படியில்லையென்றால் உடலுறுப்பின் ஒவ்வொரு உறுப்புகளாக செயலிழந்து இறுதியில் செயலிழந்த உறுப்புகளை தானம் செய்ய முடியாது என்று அறிந்திருந்தான். அதனால் அவளின் தாய் ஹைய்தராபாத்திலுள்ள மோகன் பவுண்டேஷனை அணுகினாள். Brain Dead ஆகாத நோயாளிகளிடமிருந்து உறுப்புகளை எடுக்க முடியாது என்று சொல்லி k.வெங்கடேஷ் தாயின் வேண்டுகோளை மோகன் பவுண்டேஷன் மறுத்துவிட்டது. இதனை தொடர்ந்து k.வெங்கடேஷின் தாய் ஆந்திர உயர்நீதி மன்றத்தில் உறுப்பு தானம் செய்ய அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தாள். நீதிமன்றமானது Transplantation of Human Act 1995ன் படி Brain Dead ஆகாத நோயாளியிடமிருந்து உடலுறுப்புகளை எடுக்க முடியாதென்று கூறி மனுவை நிராகரித்துவிட்டது. இறுதியாக k.வெங்கடேஷ் இறந்த பிறகு அவன் கண்கள் மட்டும் தானம் செய்யப்பட்டன. இதே போல் Alzheimers நோயால் பாதிக்கப்பட்ட நோயாளியிடமிருந்து தோல், இருதய வால்வுகள், எலும்புகள் போன்ற உறுப்புகளை மட்டுமே தானமாக வழங்க முடியுமே தவிர முழு உறுப்புகளான இருதயம், நுரையீரல், லிவர், கிட்னி போன்றவற்றை எடுக்க முடியாது. Brain Dead ஆன நோயாளியிடமிருந்து மட்டுமே இருதயம், நுரையீரல், லிவர், கிட்னி போன்ற உறுப்புகளை எடுக்க முடியும்.

2. 1973 ம் ஆண்டு, நவம்பர் மாதம் மும்பையில் நர்ஸ்ஸாக வேலை பார்த்து வந்த இளம்பெண் ஷேன்பாக்கை மருத்தவமனையில் வைத்து அடித்து, நாய் சங்கலியால் தாக்கி கற்பழித்தான் மருத்துவமனையில் வேலை செய்து வந்த குப்பை கூட்டுபவன். இந்த நிகழ்வுக்கு பின் அருணா கண்கள் தெரியாமல், காதுகள் கேட்காமல், பக்கவாதத்திற்கு உள்ளானாள். அதன் பின் அவள் உடலில் எந்தவொரு அசைவுமேயில்லாமல் ஜடம் போல் இருந்தாள். மீண்டும் பழைய நிலையை அடைய முடியாத நோயாளியை கருணை கொலை செய்யலாமா? இது தொடர்பாக அருணாவின் தோழியும், பத்திரிக்கையாளருமான பிங்கி விர்ராணி உச்ச நீதி மன்றத்தில் அருணாவிற்கு மரணத்தை கொடுக்க அனுமதி கேட்டு மனு தொடர்ந்திருந்தாள்.

பிங்கி விர்ராணி அருணாவை பற்றி "அவளால் பேசவோ, பார்க்கவோ, கேட்கவோ முடியாது. அவள் ஒரு ஜடம் போல வாழ்ந்து வருகிறாள். நன்கு நசுக்கிய கஞ்சி போன்ற உணவையே அருணாவிற்கு உணவாக அளிக்கிறோம். இதைவிட மோசமானது 36 வருடங்களாக அருணாவை பற்றி விசாரிக்கவோ, பார்க்கவோ, சேவை செய்யவோ அவளின் அண்ணன், தங்கைகளோ, உறவினர்களோ வருவதுமில்லை"

- முற்றும் -

கிரகம்

19/02/10 - நன்றி தி ஹிந்து நாளிதழ்
 
உயிரோசை இணைய இதழில் வெளியாகியுள்ளது

No comments:

பார்வைகள்