Tuesday, March 16, 2010

தவிக்கவிடப்பட்டவர்கள் (Dan Biletsky) - தமிழில் : கிரகம்

ரோமானியவை சேர்ந்தவர்கள் அதிகம்பேர் பொருளாதார தட்டுப்பாட்டினால் வெளிநாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களின் எண்ணிக்கை மில்லியனாக இருக்கலாம். ஆனால் 12 வயது ஸ்டீபன் அவனின் தாய் இத்தாலியில் வேலைக்காரியாக வேலை செய்து வருவதை சாவதை விட மோசமான நிலையாக கருதினான். ஸ்டீபன் ஒரு நாள் குதிரை சாட்டையின் உதவியுடன் செர்ரி மரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்தான். இறப்பதற்கு முன்பு செல்போனில் அவனை போட்டோ எடுத்துக் கொண்டான். ஸ்டீபன் ஒரு அமைதியான பையன். அவன் நாணயங்கள் சேகரித்தல், உபயோகமற்ற உலோகங்களை கொண்டு பொம்மைகத்தி செய்வதில் கெட்டிக்காரன். இறக்கும் போது அவன் மார்புப் பகுதியில் துண்டுப் பிரசுரம் காணப்பட்டது. “நம் மனவருத்ததிற்காக நான் மன்னிப்பு கோருகிறேன்”. துண்டுப்பிரசுரம் அவனது வலிதரும் மரணமாவது அவன் தாய் வெளிநாடுகளில் வேலைக்கு செல்வதை தடுக்கும் என்று கூறுகிறது. அவன் தாய் ரோம் நகரில் வேலை பார்க்கிறாள். இந்த நகரத்தில் தான் மூன்றில் ஒரு பங்கு ரோமானியர்கள் வேலை பார்க்கின்றனர். “நீ என்னுடைய இறுதிச் சடங்கை நினைத்து கவலைப்பட வேண்டாம், ஏனென்றால் ஒரு ஆணிடம் விறகிற்கான பணம் இருக்கும். என்னுடைய தங்கையே நீ கஷ்டப்பட்டு படிக்க வேண்டும். அம்மா நீ உன்னை நன்கு கவனித்துக் கொள் ஏனென்றால் இந்த உலகம் மோசமானது என்னுடைய குட்டி நாயை தயவு செய்து கவனித்துக் கொள்ளுங்கள்”.

ALEXANDRINA CIUXEA 38 வயதுடைய பெண். மேற்கு நோக்கி வேலைக்காக சென்ற 3 மில்லியன் ரோமானியர்களில் இவரும் ஒருத்தி. இவள் தான் ஸ்டீபனின் தாய். அவள் கூறுகிறாள் “ஸ்டீபனின் இறப்பு என்னுடைய வயிற்றில் அல்சரை ஏற்படுத்தியது”. ஸ்டீபன் இறப்பிற்கு பிறகு ஒரு வருட காலம் தன் மற்ற இரு பிள்ளைகளுடன் தங்கிவிட்டு அதன் பிறகு மீண்டும் ரோமிற்கு வேலைக்கு சென்றதாக கூறுகிறாள். இறுதியில் மற்ற எல்லாவைகளையும் விட வருமானம் முக்கியமானது என்கிறாள். அவள் இத்தாலியில் வீட்டை சுத்தம் செய்து மாதம் 770 டாலர் சம்பாதித்தாள். இந்த சம்பளம் ரோமானியாவில் வேலை செய்து கிடைப்பதை விட மூன்று மடங்கு அதிகம். “ஸ்டீபன் இறப்பு என் வாழ்க்கையில் மிகுந்த வருத்தமளித்தது. ஆனால் நான் அவர்களை விட்டு வந்தேன் ஏனென்றால் நான் ஒரு ஏழை மேலும் என் பிள்ளைகளுக்கு உணவு வாங்கி தரமுடியாத நிலையில் இருந்ததாள்”, இவ்வாறு ALEXANDRINA தொலைபேசி நேர்காணலில் கூறியிருந்தாள்.

1989ல் கம்யூனிஸம் வீழ்ச்சிக்கு பின் ரோமனியாவில் ஏழைகளாக இருந்தவர்கள், கிராமப்புறங்களில் வசித்தவர்கள் வேலைக்காக வெளிநாடு செல்ல துவங்கினர். மேலும் இரண்டு வருடங்களுக்கு முன்பு ரோமனியா ஐரோப்பிய யூனியனுடன் இணைக்கப்பட்டது. ஸ்பெயின், இத்தாலி மற்ற நாடுகளின் நெருக்கடியில்லாத IMMIGRATION முறையை அறிமுகம் செய்து கிழக்கிலிருந்து வந்த குறைந்த விலை வேலைக்காரர்களை கவர்ந்தனர்.

கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்யும் ரோமானியர்கள் அவர்கள் விருப்பமான வேலையை எடுத்துச் செய்தனர். ரோமானிலிருந்து ஸ்ட்ராபெர்ரி பழம் பிடுங்கவும், கட்டுமான வேலைகள் செய்யவும், வீட்டை சுத்தம் செய்யவும் செல்பவர்கள் அருகிலுள்ள பணக்கார நாடுகளுக்கு நீண்ட காலம் தேவையில்லை. ஆனால் வெளிநாடுகளில் வசிப்பவர்களினால் அரசாங்கத்திற்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. சென்ற வருடம் வெளிநாடுகளில் வசித்தவர்கள் 10.3 மில்லியன் டாலர் அவர்களது குடும்பத்திற்கு அனுப்பியிருக்கின்றனர்.

சொரஸ் பவுண்டேஷன் ஆய்வு மற்றும் கணக்கெடுப்பின் படி 170000 குழந்தைகளின் பெற்றோர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ வெளிநாடுகளில் வேலை செய்து வருகின்றனர். இவ்வாறு தனிமையில் விடப்பட்ட குழந்தைகள் மதுப்பழக்கங்களுக்கு அடிமையாவதும், சிகரெட் புகைப்பதும், போலீசில் தவறு செய்து மாட்டிக் கொள்வதும், பள்ளிக் கூடத்தில் நடத்தைகள் மோசமாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சில குழந்தைகள் பாலியியல் தவறுகள் செய்வதற்கு காரணம் பெற்றோர் தங்களை விட்டுப்பிரிந்ததினால் தான் என்று பெற்றோர் மீது குற்றம் சாட்டுகின்றனர்.

DENISA IONESCU, ஒரு மனநல மருத்துவர். குழந்தைகளை தனியே விட்டுவிட்டு வெளிநாடுகளில் வேலை செய்யும் பெற்றோர்களின் குழந்தைகளை பரிசோதனை செய்துள்ளார். அவர் இந்தக் குழந்தைகள் அதிகப்படியான மன அழுத்தத்திற்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகவும், குறிப்பாக தாயை பிரிந்து வாழும் குழந்தைகள் முழுவதுமாக தனிமையில் இருப்பதாக எண்ணுவதாகவும் கூறுகிறார். “தாய் தான் தன்னுடைய குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால் ஒரு தாய் தன் குழந்தையை பிரியும் போது, குழந்தையின் உலகத்தில் இருள் சூழ்கிறது”.

கடந்த 3 ஆண்டுகளில் தனிமையில் விடப்பட்ட 14 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டதாக சொரஸ் பவுண்டேஷன் நடத்திய ஆய்வு கூறுகிறது.

வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் தங்கள் குழந்தைகளை அவர்களது தாத்தா, பாட்டியிடம் விட்டுச் செல்கின்றனர். சிலர் குழந்தைகளை பராமரிக்கவும் விரும்புவதில்லை. வெவ்வேறு நாடுகளில் வேலை பார்க்கும் கணவன் மனைவிகளிடையே விவாகரத்தும் அதிகரிக்கிறது. எதுவுமே முடியாத தருணத்தில் குழந்தைகளை குழந்தைகள் காப்பகத்தில் விட்டுச் செல்வதாக குழந்தைகளுக்கான வழக்கறிஞர் கூறுகிறார்.

நேஷனல் டெலிவிஷனில் எம்மி அவார்டு ஜெயித்த படமான ‘ANY IDEA WHAT YOUR KID IS DOING RIGHT NOW?’ ஒளிபரப்பானது. படத்தின் கதையானது, திருமணமான பெண் கண் தெரியாத கணவனையும் ஆறு குழந்தைகளையும் விட்டுப் பிரிந்து ஜெர்மனியில் வேலைக்காரியாக வேலை செய்கிறாள். அவள் ஜெர்மனியில் வேறொருவனை சந்தித்து மணந்து கொள்கிறாள். பிறகு அவள் தன் குழந்தைகளையோ, கணவனையோ சந்திக்க வரவில்லை. விரைவிலே குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டாமென்று தடுத்து நிறுத்தப்படுகின்றனர். பிறகு அந்தக் குழந்தைகள் வேலைக்கு செல்கின்றனர்.

வெளிநாடுகளில் வேலை பார்ப்பதால் கிடைக்கும் சலுகைகள் குறைந்த நாட்களே, பண வீழ்ச்சி காலங்களில் அவர்கள் திரும்பவும் சொந்த நாட்டிற்கு துரத்திவிடப்படுவதாகவும் வணிகவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆயிரத்திற்கும் மேலான ரோமானியர்கள் வேலையில்லாமல் ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளிலிருந்து கிளம்பி சொந்த நாட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றனர். “சில காலங்கள் வெளிநாடுகளில் வேலை செய்வதால் கிடைக்கும் வணிகவியல் லாபம் நீண்ட கால பணதேவையை தீர்மானிக்க முடியாது”. என்று RADU SOUIANI என்ற வணிகவியல் வல்லுநர் கூறுகிறார். “இது ஒரு நாட்டின் துயரமான முடிவு”.

தடாகம் இணைய இதழில் வெளியாகியுள்ளது

1 comment:

Anonymous said...

சூப்பரான பதிவு

பார்வைகள்